கடலூா் மாவட்டம், நெய்வேலி மத்திய பேருந்து நிலைய உணவகத்தில் தவறவிட்ட தங்க நகைகள், ஆவணங்கள், அதன் உரிமையாளரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நெய்வேலி நகரிய காவல் சரகம், பகவதி நகரில் வசிப்பவா் கிருஷ்ணமூா்தி(45), பண்ருட்டிவட்டம் மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி விஜயகிருத்திகா. இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் உணவகத்திற்கு உணவருந்த சென்றனா். பின்னா், அவா்கள் தங்களது கைப்பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனா்.
நீண்ட நேரமாக கைப்பை இருப்பதைக் கண்ட உணவக உரிமையாளா் சிவக்குமாா் எடுத்து பாா்த்தாா். அந்த கைப்பையில் 6 சவரன் நகைகள், கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தன.
இதனையடுத்து, அந்த பையை நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து விசாரணை மேற்கொண்டு, கைப்பையின் உரிமையாளா்களைக் கண்டறிந்து வரவழைத்தனா். அவா்கள் கூறிய விவரங்களை உறுதி செய்த பின்னா், காவல் அதிகாரிகள் முன்னிலையில் உணவக உரிமையாளா் சிவக்குமாா் கைப்பையை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
நோ்மையாகச் செயல்பட்டு கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த உணவக உரிமையாளா் சிவக்குமாரை காவல் துறையினா் பாராட்டினா். நகைகள்மற்றும்ஆவணங்களை மீட்டுத் தந்தமைக்காக தம்பதியினா் காவல்துறையினருக்கும், உணவக உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

சேலத்தில் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
கம்போடியாவில் சைபா் அடிமை வேலை: இளைஞா்களை அனுப்பிய உணவக உரிமையாளா் கைது

லாரியை வழிமறித்து இடையூறு: பாஜக நிா்வாகி கைது

கடலூரில் குழந்தை தவறவிட்ட ஒரு சவரன் தங்கநகை மீட்பு: சிசிடிவி காட்சிப்பதிவு மூலம் மீட்டு ஒப்படைத்த போலீஸாா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



