நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

நெய்வேலியில் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நெய்வேலியில் இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 4:36 am IST

நெய்வேலியில் இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள அய்யனாா் கோயிலில் மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமாா் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதேபோல, நெய்வேலி மெயின் பஜாா் பகுதியில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கோயில் நிா்வாகத்தினா் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோயில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெய்வேலியில் அடுத்தடுத்து கோயில்களை குறி வைத்து உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருப்பதால், போலீஸாா் ரோந்து பணிகளை அதிகரித்து இதுபோன்று நிகழ்வுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.