
தினமணி செய்தி எதிரொலி: வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி தொடக்கம்
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்தி எதிரொலியை தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி.
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பண்ருட்டி சாலையில் உள்ள பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, வடலூா் காவல் நிலையம், வடலூா் நகராட்சி திருமண மண்டபமாக அண்ணா திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பழைய காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, கடந்த 29.6.2026 அன் பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜை நடத்தி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் காவல் நிலையம் செயல்படுவதால் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்து தினமணி நாளிதழ் செப்.2-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக, கடந்த சில நாள்களாக வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





