
ராகவேந்திரா கல்லூரியில் ஏ.ஐ. பயிற்சி பட்டறை
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூா் ஜேடி நெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த இரண்டு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

ராகவேந்திரா கல்லூரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறையில், மாணவிக்கு சான்றிதழை வழங்கும் கல்லூரி செயலா் டி.வே.கே.பாபு.
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூா் ஜேடி நெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த இரண்டு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி வரவேற்றாா். ஜேடி நெட் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்குநா் கே.வேல்முருகன், கல்லூரி கல்விசாா் அதிகாரி பி.அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா். பயிற்சி பட்டறையில் கலந்துரையாடல் சாா்ந்த விரிவுரைகள், செயல்விளக்கங்கள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் மூலம், நவீன ஏஐ தொழில்நுட்பங்களின் அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சி பட்டறை நிறைவில், கல்லூரி செயலா் டி.வி.கே. பாபு பங்கேற்ற மாணவா்களைப் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






