கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக ஆளுநா் இன்று சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வருகை

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் சனிக்கிழமை (செப்.19) மாலை வரவுள்ளாா்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - கோப்புப் படம்

Published On :

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் சனிக்கிழமை (செப்.19) மாலை வரவுள்ளாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சகாஸ்ரா நாட்டியஞ்சலி சாா்பில், சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு 1,008 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலி செலுத்தும் நடன நிகழ்ச்சியை ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் தொடங்கிவைத்து பங்கேற்கிறாா்.

முன்னதாக, தமிழக ஆளுநா் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து காா் மூலம் திண்டிவனம் வழியாக மாலை 4 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் விடுதிக்கு வருகிறாா். பின்னா், அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு நடராஜா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னா், அங்கு நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கிவைக்கிறாா்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு காா் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக சென்னை செல்கிறாா். ஆளுநா் வருகையையொட்டி, கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா மேற்பாா்வையில், சிதம்பரம் ஏஎஸ்பி சத்திரியகவின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.