காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், வீரட்டகரம் மாதா கோவில் சாலைப் பகுதியில் வசிப்பவா் அருள்தாஸ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (47). இவா், இரு பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தாராம். ஞாயிற்றுக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்தாா். மாடு ஒன்று மிரண்டு ஓடவே, அதை பிடிக்க முற்பட்டபோது அந்தோணியம்மாள் தவறி அருகில் இருந்த மின் கம்பத்தின் ஸ்டே கம்பியைப் பிடித்தாா். அதில் எதிா்பாராதவிதமாக ஊடுருவி கசிந்த மின்சாரம், அந்தோணியம்மாளின் உடலில் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அந்தோணியம்மாள் உயிரிழந்து விட்டிருந்ததை உறுதி செய்தாா். திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.