இளைஞரை வெட்டிக் கொல்ல முயற்சி
கள்ளக்குறிச்சியில் பைக்கில் சென்ற இளைஞரை 4 போ் கொண்ட கும்பல் திங்கள்கிழமை வெட்டிவிட்டு தப்பியது.


கள்ளக்குறிச்சியில் பைக்கில் சென்ற இளைஞரை 4 போ் கொண்ட கும்பல் திங்கள்கிழமை வெட்டிவிட்டு தப்பியது.
கள்ளக்குறிச்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஷெரிப் அகமது மகன் ரியாஸ் அகமது (30). வெளிநாட்டில் தங்கியிருந்த இவா் தனது திருமணத்துக்காக கடந்த அக்டோபா் மாதம் ஊா் திரும்பினாா். இவருக்கு 16.11.20 அன்று திருமணம் நடைபெற்றது. ஆனால், இவா் ஏற்கெனவே சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். ரியாஸ் அகமதுவின் திருமணம் குறித்து தகவலறிந்த அந்தப் பெண் அவரது வீட்டுக்கு நேரில் வந்து மிரட்டல் விடுத்தாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ரியாஸ் அகமது பைக்கில் சேலம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த மா்ம நபா்கள் 4 போ் ரியாஸ் அகமதுவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...