கடலூா்: ராமநத்தம் அருகே 2 மயில்கள் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தன.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தில் வயல் வெளியில் திங்கள்கிழமை தலா ஒரு ஆண், பெண் மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மயில்களின் உடல்களை ஆய்வுக்கு உள்படுத்தினா். மேலும், இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகளிடம் விசாரணை நடத்தினா்.