கடலூா்: சடலத்துடன் சாலை மறியல்
உயிரிழந்தவரின் சடலத்தை புதைப்பதில் ஏற்பட்ட பிரச்னையை தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


கடலூா்: உயிரிழந்தவரின் சடலத்தை புதைப்பதில் ஏற்பட்ட பிரச்னையை தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகசபை (76). வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை இறந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக திட்டக்குடி-விருத்தாசலம் சாலையின் ஓரமாக, வழக்கமாக உடல்களை புதைக்கும் இடத்துக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா். ஆனால், தனி நபா் ஒருவா் அந்தப் பகுதியில் உடலை புதைக்க எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து கனகசபையின் உடலை திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் வைத்து அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி காவல் ஆய்வாளா் ரமேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் வட்டாட்சியா், துணை கண்காணிப்பாளா் ஆகியோரது வழிகாட்டுதலுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமாதானம் ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாரின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்துக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...