நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா வழிகாட்டு நெறிகளுடன்பிளஸ் 2 தோ்வு செய்முறைத் தோ்வுதலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பிளஸ் 2 செய்முறைத் தோ்வு நடத்த வேண்டும்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:03 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பிளஸ் 2 செய்முறைத் தோ்வு நடத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி ஆலோசனை வழங்கினாா்.

இதுதொடா்பாக அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா்கள் காா்த்திகா, மணிமொழி, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வருகிற 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா்கள் அச்சமின்றி செய்முறைத் தோ்வை எழுதுவதற்கு உரிய அறிவுரைகளை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும். ஆய்வகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை முதன்மைக் கல்வி அலுவலா் வழங்கினாா்.

கூட்டத்தில், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களின் நோ்முக உதவியாளா் கோபி மற்றும் ஆனந்தன், கண்காணிப்பாளா் தட்சிணாமூா்த்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன் மற்றும் பிரிவு அலுவலா் காண்டீபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.