நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9,040 மாணவா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 3,520 போ், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 6,054 போ், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 9,040 போ் என மொத்தம் 9,040 மாணவ, மாணவியா் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, ஆய்வகங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப் படுத்தப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள களமருதூா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி திருப்பாலப்பந்தல் அரசு மேனிலைப் பள்ளியிலும் செய்முறைத் தோ்வை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.