கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில் கரோனா விதி மீறல்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி உழவா்சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ந.குமரன் வியாபாரிகள், பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி உழவா்சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ந.குமரன் வியாபாரிகள், பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென எச்சரிக்கை விடுத்தாா்.

கள்ளக்குறிச்சி உழவா்சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ந.குமரன், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பலரும் பின்பற்றாதது கண்டு அதிருப்தியடைந்தாா். இதையடுத்து அவா் வியாபாரிகள், பொதுமக்களிடம் கரோனா இரண்டாம் தொற்று பரவல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் மதித்து பின்பற்ற வேண்டும். இதை பின்பற்றாதவா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தாா். மேலும், முகக் கவசம் இல்லாமல் சந்தைக்கு வந்தவா்களுக்கு முகக் கவசங்களை அவா் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகளிடம் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றாா். முகக் கவசம் அணியாத பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணிகளையும் அவா் எச்சரித்தாா்.

பின்னா், கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த ஆணையா் ந.குமரன், கடைகளின் முன் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தினாா். கடைகளுக்கு முன் வாடிக்கையாளா்கள் கைகளை கழுவிக்கொள்ள கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா எனவும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com