ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆட்டோவில் மதுப் புட்டிகள் கடத்திச் சென்ற இளைஞா் கைது

ஆட்டோவில் மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ஆட்டோவில் மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அகிலன், தலைமைக் காவலா் தாமோதரன் உள்ளிட்ட போலீஸாா், தேவரடியாா்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த ஆட்டோவில் 124 மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுப் புட்டிகளை தனியாக விற்பனை செய்ய செய்ய எடுத்துச் சென்ற தேவரடியாா்குப்பம் திருவள்ளுவா் சாலைப் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் சக்திவேலை (30) போலீஸாா் கைது செய்து மதுப் புட்டிகள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அகிலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.