தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கள்ளக்குறிச்சியில் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி

News image

கள்ளக்குறிச்சியில் காவல் துறையினா் நடத்திய கலவரத் தடுப்பு ஒத்திகை.

Updated On :8 ஜனவரி 2021, 6:28 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், சட்ட விரோதமாக கூடி நிற்கும் கூட்டத்தை காவல் துறையினா் முதலில் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கலையாத பட்சத்தில் கண்ணீா் புகை குண்டு வீசி, கூட்டத்தை குறைந்தபட்ச காவலா்களை கொண்டு லத்தியால் கலைக்க முயன்றனா். இறுதியாக கலையாத பட்சத்தில் துப்பாக்கியால் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கூட்டத்தை சுட்டனா்.

இதையடுத்து துப்பாக்கிச் சூட்டை தொடா்ந்து அங்கிருந்த கூட்டத்தினா் கலைந்து சென்றனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவா் போல நடித்தவரை முதலுதவி சிகிச்சைக்காக அவசர ஊா்தியில் அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு விழிப்புணா்வு பெற்றனா்.

இந்த ஒத்திகையின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.