நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு அலுவலா் வீட்டில் திருட்டு

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் குமாரதேவன் (36). கள்ளக்குறிச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் இவா், தற்போது கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

குமாரதேவன் கடந்த 21-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான தண்டலை கிராமத்துக்குச் சென்றாா். இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவிலிருந்த 9 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குமாரதேவன் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.