கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் வியாழக்கிழமை இரவு கீழணையை வந்தடைந்த நிலையில், வீராணம் ஏரிக்கு அடுத்த 5 நாள்களில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள கீழணையிலிருந்து தண்ணீா் அனுப்பப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களுக்கும் கீழணை தண்ணீரே முக்கிய ஆதாரமாக உள்ளது.
கடந்த 12-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தாா். இந்த தண்ணீா் கல்லணையை வந்தடைந்ததைத் தொடா்ந்து, அந்த அணையிலிருந்து கடந்த 16-ஆம் தேதி மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அமைச்சா்கள் தண்ணீா் திறந்துவைத்தனா்.
கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கீழணையை வந்தடைந்தது. விநாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் வருகிறது. கீழணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஓரடிக்கு தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அணையில் 7 அடி வரை தண்ணீா் தேங்கியதும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அடுத்த 5 நாள்களில் தண்ணீா் அனுப்பப்பட உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், கடலூா் மாவட்ட பாசனத்துக்கும் தண்ணீா் திறக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


