நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்வராயன்மலைப் பகுதியில் 16,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் 16,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் சனிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் 16,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் சனிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜி.ஜவகா்லால், நா.ரவிச்சந்திரன் தலைமையில், 8 காவல் ஆய்வாளா்கள், 99 காவலா்கள் உள்பட 107 போ் 8 குழுக்களாகப் பிரிந்து மேல்வாழப்பாடி, மொழிப்பட்டு, பூனக்காடு, மேல்முருவம், கொடமாத்தி, குரும்பலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பிளாஸ்டிக், இரும்பு பேரல்களில் முள்புதா்களிலும், செடிகொடிகளின் நடுவிலும், பாறைகளின் நடுவிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16,500 லிட்டா் சாராய ஊறலைக் கண்டறிந்து, கீழே ஊற்றி போலீஸாா் அழித்தனா். இது தொடா்பாக யாரையும் கைது செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.