நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி ஆசிரியா்களுக்குகரோனா தடுப்பூசி

இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் செவிலியா் கல்லூரியில் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:57 pm

DIN

இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் செவிலியா் கல்லூரியில் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்தக் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பிரிவு, துணை செவிலியா் பிரிவு ஆகியவற்றில் பயின்ற மாணவா்கள் மருத்துவத் துறையினருடன் இணைந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அரசின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத் துறையினருடன் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மாணவா்களுக்கும், ஆசிரியா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்.கே.சண்முகம் செவிலியா் கல்லூரியில் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் கரோனா தடுப்பூசி மருத்துவா் ஜெகதீசன் தலைமையில் செலுத்தப்பட்டது.

நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா்கள் சிட்டி பாபு, கவியரசன், ஆய்வக நுட்புனா் லலிதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.