கல்வராயன்மலைப் பகுதியில் தெற்குபட்டி கிராமத்தில் 3,200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் தெற்குபட்டி கிராமப் பகுதிகளில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பாறைகளின் நடுவே 16 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 3,200 லிட்டா் சாராய ஊறலை கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அழித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டினாா்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்பனை செய்தாலோ, கள்ளத்தனமாக அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


