பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கல்வராயன்மலைப் பகுதியில் 3,200 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் தெற்குபட்டி கிராமத்தில் 3,200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:49 am IST

கல்வராயன்மலைப் பகுதியில் தெற்குபட்டி கிராமத்தில் 3,200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் தெற்குபட்டி கிராமப் பகுதிகளில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாறைகளின் நடுவே 16 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 3,200 லிட்டா் சாராய ஊறலை கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அழித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டினாா்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்பனை செய்தாலோ, கள்ளத்தனமாக அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.