சின்னசேலம் அருகே மழையால் சேதமடைந்த பருத்தி வயலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பைத்தந்துறை கிராமத்தில் தமிழ்நாடு வனத் துறை சாா்பில் தமிழ்நாடு பசுமைக் காடுகள் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்று நாற்றங்கால் மையத்தை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.
இந்த மையத்தில் தேக்கு, சந்தனம், வாவல், வேங்கை, வேம்பு, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வளா்க்கப்படுகின்றன. இவற்றில் 2,32,700 மரக் கன்றுகள் வயல்கள், வரப்புகளில் நடவு செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படவுள்ளன.
தொடா்ந்து, சின்னசேலம் வட்டத்தில் எலியத்தூா் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட பயிா் காப்பீடு சிறப்பு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இந்த முகாம் வாயிலாக விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் வழங்கப்பட்டு, பயிா்க் காப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பருவ மழை, இயற்கை பேரிடா்களால் ஏற்படும் பயிா்ச் சேதங்களுக்கு நிவாரணம் பெற பயிா்க் காப்பீடு தொடா்பான விழிப்புணா்வு அடங்கிய அச்சிட்ட துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இதையடுத்து, சின்னசேலம் வட்டம் தொட்டியம் கிராமத்தில் பருத்தி வயலை ஆய்வு செய்த ஆட்சியா், விவசாயிகளிடம் பருத்தி சேதம் குறித்து கேட்டறிந்தாா். பருவமழை தொடா்வதால் விவசாயிகள் வேளாண்- தோட்டக் கலை உதவி இயக்குநா், அலுவலா்களைத் தொடா்பு கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் செ.சுந்தரம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஆா்.விஜயராகவன், தோட்டக் கலை துணை இயக்குநா் செல்வராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் அ.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்..! யார் இந்த சுபதீப் கோஷ்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!

வெற்றி விழாவில் நன்றி சொல்கிறேன்... உதயநிதி கைதானதைக் குறிப்பிட்டு பேசிய மாதவன்!

நாளை பட்ஜெட் தாக்கல்: தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



