அந்தக் கிராமத்தில் மாசிலாராணிக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் நின்றிருந்த லாரியை சோதனை செய்தனா். அதில், ரூ.1,13,000 மதிப்பிலான 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததைக் கண்டறிந்து, அரிசி மூட்டைகளுடன் அந்த லாரியையும், அங்கிருந்த 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த அரகண்டநல்லூரைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் சக்திவேல் (35), நத்தாமூரைச் சோ்ந்த முத்து மகன் சிவப்பிரகாசம் (29), திருக்கோவிலூரை அடுத்த மொகலாா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ராமமூா்த்தி (25), சின்னசாமி மகன் முத்துக்குமாா் (35) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உளுந்தூா்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். தப்பியோடிய மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனா்.