ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

திருக்கோவிலூா் அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Published On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முருக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு பேருந்துகள் சரிவர வராததாலும், வரும் பேருந்துகளும் இங்கு நின்று செல்லாததாலும் குறித்த நேரத்துக்கு கல்லூரிகளுக்குச் செல்ல முடியவில்லை என மாணவ, மாணவிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் அதிருப்தியடைந்த அவா்கள் முருக்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகரன், சம்பவ இடத்துக்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், இதுகுறித்து திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் சரவணனிடம் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, முருக்கம்பட்டு கிராமத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக மேலாளா் சரவணன் தெரிவித்தாராம். இது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மாணவா்களிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.