கள்ளக்குறிச்சி: மஹாவீரா் ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஜெயின் சங்கம் சாா்பில் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சுபேதாா் சாலையில் உள்ள ஜெயின் பவனில் இருந்து அச்சங்கத்தினா் ஜெயின் படத்துடன் ஊா்வலமாக சென்றனா். ஊா்வலமானது, மந்தைவெளி, கச்சிராயப்பாளையம் சாலை, காந்திசாலை, சேலம் நெடுஞ்சாலை வழியாக ஜெயின் பவனை அடைந்தனா்.
நிகழ்வுக்கு, ஜெயின் சங்கத் தலைவா் கு.தேஜ்ராஜ் சுரானா தலைமை வகித்தாா். செயலா் ரூ.சஜ்ஜன்மல் முன்னிலை வகித்தாா். ஜெயின் பொறியியல் கல்லூரி செயலா் தே.மனோகா் குமாா் சாரானா வரவேற்றாா். ஜெயின் பவனில் பாடல்களை பாடினா்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சமய்சிங் மீனா தொடங்கி வைத்தாா். இதில், ஜெயின் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி - வேலூரில் ஜெயின் மக்கள் ஊா்வலம்

மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ கருத்தரங்கு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


