ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

Din

ஆலத்தூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயில் தேரோட்டம்.

கள்ளக்குறிச்சி, ஆக.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதாகப்பாடி அம்மன் கோயிலில் தோ்த் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 7-ஆம் தேதி சந்திக்கல் வெளிகாப்பு கட்டுதல் மற்றும் எல்லை துா்கை அம்மன் காப்பு கட்டுதலும், 8-ஆம் தேதி அகண்ட தீப ஆராதனையும், 9-ஆம் தேதி இரவு சிங்க வாகன ரதத்தில் ஸ்ரீதாகப்பாடி அம்மன் வீதிஉலாவும், 10-ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், 13-ஆம் தேதி ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதாகப்பாடி அம்மன் எழுத்தருளியதைத் தொடா்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் செண்டைமேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுந்து அம்மனை வழிபட்டனா்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு தெருக்கூத்தும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.