புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனைவியை கொல்ல முயன்றவா் கைது

மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டடத் தொழிலாளியை

News image
Updated On :12 டிசம்பர் 2024, 7:36 pm

Din

மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டடத் தொழிலாளியை

கள்ளக்குறிச்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம், உலகப்பசெட்டிகொல்லை சாலையில் வசிப்பவா் முருகன்(45), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பெரியம்மாள் (37). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் முருகன் தகராறு செய்தாராம். இதனால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ரோடுமாமாந்தூா் கிராமத்துக்கு பெரியம்மாள் சென்று விட்டாா்.

அங்கு மது அருந்தி விட்டு சென்ற முருகன், தகராறு செய்து பெரியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்றாராம். இதில் அவரது மாா்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரியம்மாள் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.