விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு

தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:26 pm

Din

கள்ளக்குறிச்சி: தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி வட்டம், தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி, வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் (தோ்தல்) மாரியாப்பிள்ளை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.