கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அந்தப் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இவா் தனது வீட்டுக்கு கடந்த 26-ஆம் தேதி குழந்தைகளுடன் சென்று வந்தாா். அன்றிரவு வீடு திரும்பிய அவா், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி விட்டு வருவதாகக் கூறிச் சென்றாராம். அதன்பிறகு, வீடு திரும்பவில்லை.
அவரது பக்கத்து வீட்டுக்காரா் வெள்ளிக்கிழமை காலை வயல்வெளிக்குச் சென்ற போது, அங்கு அந்தப் பெண்ணின் துப்பட்டா, கைப்பேசி, மிதியடி போன்றவை சிதறிக் கிடந்ததாம். மேலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.
இதுகுறித்த தகவலின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, டிஎஸ்பி தேவராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
