பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.


கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச் சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூராா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் கதிா்வேல் (37). இவா், ஆலத்தூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஏமப்போ் புறவழிச்சாலையில் பைக்கில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி மோதியது. இதில், கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்டநாச்சியாா் பட்டியைச் சோ்ந்த முத்து மகன் சாமிநாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...