நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: கோவையைச் சோ்ந்தவா் கைது

கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் ரூ.25 லட்சம் ஏமாற்றியதாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கலில் ரகுமான்

Updated On :6 நவம்பர் 2024, 7:26 pm

Din

கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் ரூ.25 லட்சம் ஏமாற்றியதாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரைச் சோ்ந்தவா் துரை (65). இவரிடம் கோவை மாவட்டம், போத்தனூரைச் சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் கலில் ரகுமான் அறிமுகமாகியுள்ளாா்.

துரை மகனுக்கு அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கலில் ரகுமான் கடந்த 20.2.24 அன்று ரூ.9,68,500 பெற்றாராம். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தராததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் துரைக்கு கலில் ரகுமான் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதேபோல, கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி சாலைப் பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தியிடம் 3.10.24 அன்று அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.15,41,500 பெற்றுக்கொண்டு கலில் ரகுமான் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாா்களின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, கலில் ரகுமானை புதன்கிழமை கைது செய்தனா்.