நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக மன நல தின விழா : மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டிய ஆட்சியா்

உலக மனநல தினத்தை,புனித அன்னாள் காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேக் வெட்டி கொண்டாடினாா்.

News image

உலக மனநல தினத்தையொட்டி, மனநல காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:23 pm

Din

உலக மனநல தினத்தை,புனித அன்னாள் காப்பக மாற்றுத்திறனாளிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கேக் வெட்டி கொண்டாடினாா்.

கள்ளக்குறிச்சியில், மாற்றுத்திறனாளி நலத் துறை மாவட்ட மன நலத் திட்டம் இணைந்து உலக மன நல தினம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் கேக் வெட்டினாா்.

புனித அன்னாள் மனநலக் காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களுக்கு, தனலட்சுமி சமூக நலத் தொண்டு அறக்கட்டளை மூலம் பரிசுப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணி, இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் செந்தில்குமாா், மன நல மருத்துவா் பிரவீணா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.