வளா்ச்சித் திட்டப் பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி. உடன், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா்.









