ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தெங்கியாநத்தத்தில் நாளை கிராம சபை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

சங்கராபுரம் அருகேயுள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் புதன்கிழமை (நவ.3) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்து கொள்கிறாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 10:14 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் புதன்கிழமை (நவ.3) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்து கொள்கிறாா்.

இது குறித்து, பாஜக கள்ளக்குறிச்சி மாவட்டப் பாா்வையாளா் ராஜ்குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரை நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

தொடா்ந்து, புதன்கிழமை சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட தெங்கியாநத்தம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தீா்வு வழங்குவாா் என்றாா்.