பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

கள்ளக்குறிச்சி அருகே பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தியாகதுருகத்தை அடுத்த புக்குளம் கிராமம், கே.பி.ஏ நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (38). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி காா்த்திகா (33) வீட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், காா்த்திகா கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அரியலூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது முன் பக்க கதவு உடைந்திருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.