ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:40 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 3 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 29 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் டிச-29 ஆம் தேதி காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோா் முன் வைப்பு தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,000 -த்தை ஏலம் நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் செலுத்தவேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.

மேலும், ஏலத்தில் கலந்துகொண்டு டோக்கன் பெறும் ஒவ்வொருவரிடமும் ஏலம் விடும் செலவுக்கு ரு.100 பெறப்படும். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் டிச.29-ஆம் தேதி காலை 8 மணிக்கு நேரில் பாா்வையிடலாம்.

இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி, அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி.யும் சோ்த்து செலுத்தவேண்டும். ஏலம் விடும் நேரத்தில் வாகன உரிமையாளா் கலந்துகொண்டால், அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையிடம், மாவட்ட காவல் அலுவலகத்தை நேரடியாகவோ, 04151-220260, 9042417209 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.