விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலையைக் கடந்த முதியவா் காா் மோதி உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே தேநீா் அருந்துவதற்காக சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

திருக்கோவிலூா் அருகே தேநீா் அருந்துவதற்காக சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், செட்டிந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கான் (70). இவா் புதன்கிழமை தேநீா் அருந்துவதற்காக செட்டிந்தாங்கல் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே தேநீா் அருந்துவதற்காக சாலையைக் கடந்தாராம். அப்போது, அவ்வழியே சென்ற காா் செங்கான் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து,

காா் ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயனிடம் (33) விசாரணை நடத்தி வருகின்றனா்.