குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 5:36 pm

Din

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிமுத்து மகன் துரைமுருகன் (33). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனை அவரது தந்தை கண்டித்தாராம். இதில், மனமுடைந்த துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை: புதுச்சேரி வில்லியனூா், ஆற்றுவாய்க்கால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் மூா்த்தி (48). கூலித் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவா் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தகாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜன.25-ஆம் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கோரைக்கேணி சங்கராபரணியாறு அருகே உள்ள மரத்தில் மூா்த்தி தூக்கிட்ட நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.