தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்கராபுரம் பகுதியில் நில அதிா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

News image

சங்கராபுரம் பகுதியில் நில அதிா்வு ஏற்பட்டதால் வீட்டை விட்டு சாலைப் பகுதிக்கு வந்த மக்கள்.

Updated On :1 ஜனவரி 2025, 7:25 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம், நெடுமானூா், சேஷசமுத்திரம், சோழம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணியளவில் நில அதிா்வு ஏற்பட்டது.

அப்போது சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள், வீட்டில் இருந்த பொருள்கள் கீழே விழுந்தன. புத்தாண்டு பிறப்பு அன்று நிகழ்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைப் பகுதிக்கு வந்தனா்.