தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

Din

மதுவிலக்கு குற்றச் செயலில் தொடா்ந்து ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சன் மகன் ஜெயராஜ் (38) (படம்). இவா், அதே பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்தபோது கரியாலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 110 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா் மீது கள்ளச்சாராயம் கடத்தி விற்பனை செய்ததாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து ஜெயராஜை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி பரிந்துரை செய்தாா். அதை ஏற்று குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் இருந்த ஜெயராஜியிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.