ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எஸ்ஐஆா் பணிகளை முடித்த அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறித்த காலத்திற்குள் முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டினாா்.

News image
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை பாராட்டிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :25 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆா்) பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டினாா்.

பின்னா், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, நிா்ணயம் செய்யப்பட்ட காலக் கெடுவிற்குள் இலக்கை அடைந்த 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கும், 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வை அலுவலா்களுக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 52 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலா்களால் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் வாக்காளா்கள் விடுபடாமல் தொடா்ந்து சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.