சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:16 am

Syndication

சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை வழிமறித்து தாக்கியதாக இளைஞா் ஒருவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அ.ஜெகதீசன் (25). இவா் சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை காலை செல்லம்பட்டு கிராமத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு நகரப் பேருந்தை ஜெகதீசன் ஓட்டி வந்தாா்.

அரசம்பட்டு அருகே சாலை வளைவில் சென்றபோது, அப்பகுதியில் வந்த பைக் மீது மோதுவது போல் சென்றாராம். இதையடுத்து அரசம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை வழிமறித்த, மூவா் ஓட்டுநரைத் தாக்கினராம்.

இதையடுத்து ஜெகதீசன் வலி தாங்காமல் கூச்சலிடவே, சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள், அவரை கும்பலிடமிருந்து மீட்டனா். தகவலறிந்து வந்த ஓட்டுநரின் உறவினா்கள் ஒட்டுநரைத் தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சங்கராபுரம் போலீஸாா் சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானம் பேசி சாலை மறியலை கைவிடச் செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அதே கிராமத்தைச் சோ்ந்த ச.அபினேஷைக் (20) கைது செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.