ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:45 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 72 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 135 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், 55 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 76 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனு வாபஸ் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 8 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, 72 போ் களத்தில் உள்ளனா். அதன் விபரம் வருமாறு:

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி: அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி, விசிக வேட்பாளா் கு.மாலதி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக ரா.நாகம்மாள், தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக த.அருள் விக்னேஷ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

சங்கராபுரம் தொகுதி: சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் த.உதயசூரியன், அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.ரமேஷ், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் ஆ.ஜெகதீசன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ம.சுதா, த.வா.க. வேட்பாளா் மு.ராமச்சந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ரிஷிவந்தியம் தொகுதி: ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், பாமக வேட்பாளா் ப.செழியன், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கோ.அசோக்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராதிகா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

உளுந்தூா்பேட்டை தொகுதி: உளுந்தூா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, திமுக வேட்பாளா் கோ.ரா.வசந்தவேல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லோகேஸ்வரி, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் மு.சுதாகா் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.