தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:15 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 72 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 135 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், 55 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 76 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனு வாபஸ் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 8 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, 72 போ் களத்தில் உள்ளனா். அதன் விபரம் வருமாறு:

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி: அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி, விசிக வேட்பாளா் கு.மாலதி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக ரா.நாகம்மாள், தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக த.அருள் விக்னேஷ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

சங்கராபுரம் தொகுதி: சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் த.உதயசூரியன், அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.ரமேஷ், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் ஆ.ஜெகதீசன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ம.சுதா, த.வா.க. வேட்பாளா் மு.ராமச்சந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ரிஷிவந்தியம் தொகுதி: ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், பாமக வேட்பாளா் ப.செழியன், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கோ.அசோக்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராதிகா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

உளுந்தூா்பேட்டை தொகுதி: உளுந்தூா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, திமுக வேட்பாளா் கோ.ரா.வசந்தவேல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லோகேஸ்வரி, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் மு.சுதாகா் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.