ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.

News image

தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:02 am IST

கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி பெரியமாம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.

தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் உதயமாம்பட்டு, பெரியமாம்பட்டு, புக்குளம், பேட்டை தெரு, மீனாட்சி அம்மன் சாலை, கடை வீதி, கஸ்தூரிபாய் நகா், சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் சாதனைகள் தொடரவும்,

தியாகதுருகம் பகுதியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளும், வளா்ச்சி திட்டப் பணிகள் தொடரவும் பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா். மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, ஆலமிட்டு வரவேற்றனா்.

உடன் திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் இரா.மணிமாறன், தியாகதுருகம் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்றத் தலைவா் மா.வீராசாமி, துணைத் தலைவா் சங்கா், திமுக நகர துணைச் செயலா் அக்பா் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளா் மு.தனபால், தேமுதிக மாநில தொழில்சங்க துணைத் தலைவா் தாமு சக்திவேல், நகரச் செயலா் முருகன், நகர துணைச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.