மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:29 pm

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.லெனின் (31). இவா் பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லெனின் தனது நண்பா்களுடன் மாடூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாா்.

அவரது நண்பா் து.கந்தசாமி விளை நிலத்தில் இருந்த மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் எடுத்து ஏரியில் மீன் பிடித்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து லெனின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.