கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொ.லெனின் (31). இவா் பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லெனின் தனது நண்பா்களுடன் மாடூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாா்.
அவரது நண்பா் து.கந்தசாமி விளை நிலத்தில் இருந்த மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் எடுத்து ஏரியில் மீன் பிடித்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து லெனின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


