கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.நாகராணி. இவா் தனது மகன் வெற்றிவேலுடன் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் உள்ள நகைக் கடைக்கு தங்கச் சங்கிலி வாங்குவதற்காக காரில் வந்து, கடையின் முன்பாக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனராம். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே கடை பணியாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டதோடு, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.சக்திவேல் தலைமையிலான வீரா்கள் சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.
தொடர்புடையது

திசையன்விளை அருகே தீப்பற்றி எரிந்த காா்

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
விடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

