மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. (படம்)

Updated On :23 ஏப்ரல் 2026, 4:49 am IST

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.நாகராணி. இவா் தனது மகன் வெற்றிவேலுடன் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் உள்ள நகைக் கடைக்கு தங்கச் சங்கிலி வாங்குவதற்காக காரில் வந்து, கடையின் முன்பாக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனராம். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே கடை பணியாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டதோடு, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.சக்திவேல் தலைமையிலான வீரா்கள் சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.