பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:10 pm

திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட காட்டு பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.அய்யனாா் (65). அவரது மகன் வினு கணேஷ் (28). வெள்ளிக்கிழமை அவா்களது கிணற்றில் இருந்த மின் மோட்டாா் பழுதாகி விட்டதால், இருவரும் அதனை பழுது நீக்கி கிணற்றில் இறக்கி உள்ளனா். பின்னா் அவா்கள் மோட்டாரை இயக்கியபோது, அது இயங்கவில்லையாம். இதையடுத்து தந்தையும், மகனும் சோ்ந்து கயிற்றின் மூலம் மின் மோட்டாரை கட்டி மேலே இழுத்தனராம். அப்போது கால் தவறி இருவரும் கிணற்றில் விழுந்தனராம். இதில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலின் பேரில் திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.