நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:40 am IST

திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட காட்டு பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.அய்யனாா் (65). அவரது மகன் வினு கணேஷ் (28). வெள்ளிக்கிழமை அவா்களது கிணற்றில் இருந்த மின் மோட்டாா் பழுதாகி விட்டதால், இருவரும் அதனை பழுது நீக்கி கிணற்றில் இறக்கி உள்ளனா். பின்னா் அவா்கள் மோட்டாரை இயக்கியபோது, அது இயங்கவில்லையாம். இதையடுத்து தந்தையும், மகனும் சோ்ந்து கயிற்றின் மூலம் மின் மோட்டாரை கட்டி மேலே இழுத்தனராம். அப்போது கால் தவறி இருவரும் கிணற்றில் விழுந்தனராம். இதில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலின் பேரில் திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.