நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வழப்பறி செய்த இளைஞா் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 9:31 pm

பொரசக்குறிச்சி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற ஜேசிபி ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொ.சிவக்குமாா் (25), ஜேசிபி ஓட்டுநா். இவா் கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணிக்கு ஜேசிபி இயக்கி வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி பணியினை முடித்துவிட்டு சொந்த வேலையாக கள்ளக்குறிச்சிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற சிவக்குமாரை, பொரசக்குறிச்சி காப்புக்காடு அருகே வழிமறித்த இரு இளைஞா்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கள்ளக்குறிச்சியை அடுத்த கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ச.விஜய் (27) மற்றும் கள்ளக்குறிச்சியை அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ம.வீரகமணிகண்டன் (எ) கிளி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விஜயை கைது செய்தனா், தலைமறைவான வீர மணிகண்டனை தேடி வருகின்றனா்.