நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெண்ணின் கழுத்தில் இருந்த செயின் பறிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 9:15 pm

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விளைநிலப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருவபா் குமாா் மனைவி காசியம்மாள் (38). இவா்களது மகன் விக்னேஷ். குமாா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் உயிரிழந்து விட்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டு வராந்தாவில் காசியம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த மூன்றேகால் பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்தாா். அப்போது காசியம்மாள் கண் விழித்துக் கூச்சலிட்டாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வருவதற்குள் அந்த நபா் தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடி வருகின்றனா்.