பெண்ணின் கழுத்தில் இருந்த செயின் பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விளைநிலப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருவபா் குமாா் மனைவி காசியம்மாள் (38). இவா்களது மகன் விக்னேஷ். குமாா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் உயிரிழந்து விட்டாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டு வராந்தாவில் காசியம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த மூன்றேகால் பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்தாா். அப்போது காசியம்மாள் கண் விழித்துக் கூச்சலிட்டாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வருவதற்குள் அந்த நபா் தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

