மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:09 pm

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் மு.சிவா (36). இவா் உடையனாச்சி கிராமத்தில் உள்ள அவரது மாமியாா் வீட்டுக்கு கடந்த 22-ஆம் தேதி சென்றுள்ளாா்.

பின்னா் அவரது மகள் தனுஷ்ஷா (7), உறவினா் மகன் நிவேந்திரன் (16) ஆகியோரை அழைத்துக் கொண்டு கொங்கராபாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் உடையநாச்சி கிராமத்துக்கு பைக்கில் திரும்பியுள்ளாா்.

கொங்கராபாளையம் அடுத்த பட்டி கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பைக்கில் பயணித்த மூவரும் காயமடைந்தனராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மூவரையும் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா், காா் ஓட்டுநரான ஏ.சுதீஷ் (22) மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.