தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:09 pm

Syndication

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் மு.சிவா (36). இவா் உடையனாச்சி கிராமத்தில் உள்ள அவரது மாமியாா் வீட்டுக்கு கடந்த 22-ஆம் தேதி சென்றுள்ளாா்.

பின்னா் அவரது மகள் தனுஷ்ஷா (7), உறவினா் மகன் நிவேந்திரன் (16) ஆகியோரை அழைத்துக் கொண்டு கொங்கராபாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் உடையநாச்சி கிராமத்துக்கு பைக்கில் திரும்பியுள்ளாா்.

கொங்கராபாளையம் அடுத்த பட்டி கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பைக்கில் பயணித்த மூவரும் காயமடைந்தனராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மூவரையும் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா், காா் ஓட்டுநரான ஏ.சுதீஷ் (22) மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.