மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.சரத்குமாா் (32), தொழிலாளி. இவா் கடந்த 9-ஆம் தேதி ஆரூா் கிராமத்திலுள்ள முனுசாமி என்பவரது வயலில் உள்ள தென்னை மரத்தில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சரத்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.