22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தம்பிக்கு கத்தி குத்து: அண்ணன் கைது

தியாகதிருகம் அருகே தந்தையிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:35 am IST

தியாகதிருகம் அருகே தந்தையிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் அருகேயுள்ள சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது மகன்கள் குமாா் (31), சடையன் (33).

சடையன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு விளைநிலத்துக்கு சென்று தந்தை நாராயணனிடம் பணம் கேட்டு தாக்கினாராம். இதனை அவரது தம்பி குமாா் தட்டிக் கேட்டாராம்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முடிவில் சடையன் கத்தியால் குமாரின் வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த குமாா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சடையனைக் கைது செய்தனா்.